மழை நனைத்தாலும்
ஒரே சிரிப்பு மனதை நனைக்கும்
மழை தரும் மண்வாசனை போல
காதலின் நினைவுகள்
மனதின் அடுக்குகளில்
நிதமாக தேங்கி இருக்கின்றன
மெல்லிய காற்று கூட
அவளின் நினைவை
சொல்லி விடுகிறது
மெட்டியில் விலங்கிட்டு
இதய சிறைக்குள்
உனதாக்கி கொண்டாய்
எனை காலமெல்லாம்
உன் காதல்
கைதியாய் நான்
புன்னகை பார்வையை ஈர்க்கலாம்
ஆனால் உண்மை காதல்
இதயத்தை கொள்ளை அடிக்கும்
வார்த்தைகள் இல்லாமல்
பேசும் உன் பார்வை
என் உலகத்தையே
காதலாக மாற்றிவிட்டது
கண்கள் காணாத
போதும்
சுகமாய் தீண்டும்
காற்றாய் மனதை
தீண்டி செல்கிறாய்
காதலால் இதமாய்
ஒரே ஒரு வார்த்தை
கேட்டாலே
நெஞ்சம் கவிதையாய் உருகும்
அதுதான் காதல்
உதடுகள் சேர்ந்த தருணம்
ஆசையின் இரகசிய உலகை
திறந்து விடுகிறது
மௌனத்தின் நடுவே
காதல் ஒரு இசையாக
ஒலிக்கிறது
💖 பக்கம் 53 / 478
📋 Copied