கண்களின் ஆழம் பேசும் மொழி
எந்த அகராதியிலும் இல்லை
மறைக்க முயன்ற உணர்வுகள்
ஒரு பார்வையில்
வெளிவந்து விடும்
சில உணர்வுகள்
காரணம் கேட்காமல்
இதயத்தில் குடியேறிவிடும்
காதலித்தால் கண்கள் பேசும்
பிரிந்தால் கண்ணீரே மொழியாகும்
உன் கண்களை
பார்க்கும் போதெல்லாம்
நான் சொல்ல நினைத்த
வார்த்தைகளை
மறந்து போகிறேன்
உன் மௌனம்
என் மொழியை
திருடிக்கொள்கிறது
நீ பேசும்போது
என் மனது காதலாகிறது
நீ அசைந்தால்
என் உலகமே நடனமாடுகிறது
இரவின் அமைதியை
உடைக்கும் மூச்சுகள்
இதயங்களை ஒன்றாக
கட்டிப்போடுகின்றன
எண்ண ஏட்டின்
ஆசைகளை
கன்ன ஏட்டில்
பதித்தேன்
இதழ் கவிதைகளாக
அவளின் சிரிப்புக்கு பிறகு
சோகமே வரக்கூடாது போல
ஒரு பயம் தோன்றுகிறது
அழகான உரையாடல்
இல்லாத இரவும்
அவளின் ஓர் பார்வை போதுமே
💖 பக்கம் 378 / 478
📋 Copied