மழை விழும் காட்சியில் கூட
அவளை நினைத்த
மழைத்துளியே வேறு
சுவாசம் கூட
சேர்ந்து இருக்க வேண்டும்
போலத் தோன்றும்
அந்த நெருக்கம் காதல் அல்லவா?
மெல்லிய புன்னகையில் கூட
மனம் தன்னையே கண்டடையும்
அற்புதமான பாசம் மறைந்திருக்கிறது
மனமோ
உன்னில் லயித்திருக்க
நீயோ சற்றும்
சலனமின்றி
இருக்கின்றாயே
கண்ணாய்
என் கண்ணா
உயிரை தாண்டி
நினைவில்
நிற்கும் நினைவுகள்
காதலின் அடையாளம்
ஆள்கின்றாய்
அன்பில் வாழ்கின்றேன்
மன மகிழ்வாய்
உள்ளம் நெருங்கும்போது
தூரம் என்னும்
வார்த்தை அழிகிறது
பல பக்கங்களை
புரட்டிய போதும்
ஒரு பக்கத்திலும்
அறிய முடியவில்லை
உன் மௌனத்துக்கான
காரணத்தை
மன புத்தகத்தில்
எனதென்று
எதுவுமில்லை
நாமென்றான
பின் அன்பே
சில பார்வைகள்
கோடி வார்த்தைகளை விட
நெருக்கமானவை
💖 பக்கம் 365 / 478
📋 Copied