இரு இதயங்கள்
அமைதியாய் பேசும்போது
வார்த்தைகள் தேவையில்லை
மூச்சுகள் கலந்து
ஒரே சுவாசமாக மாறும்போது
தூரம் என்பது
நம் காதலில் இருக்காது
நெருக்கம் தேவையில்லாமல்
நினைவுகளின் வாசனை
காதலை கரையச் செய்து
புதிய கனவுகளை உருவாக்கும்
கண்ணீரைத் துடைக்கும் பாசமே
வாழ்க்கையின் உண்மையான தோழன்
நிறை குடமும்
தளும்புது
கண்கள் உனை காண
மனமும் தள்ளாட காதலில்
அவள் அருகில்
இல்லாத நேரம் கூட
காதல் அவள் வாசத்தில் உலாவும்
நெருக்கம் இல்லாமல் கூட
சில பார்வைகள் தீயாக எரிக்கும்
சிரிப்பின் பின்னால்
ஒளிந்திருக்கும் ஆசைதான்
உண்மையான காதல்
நீ மூச்சி
காற்றுப்படும் தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா தேசத்திலும்
உயிர் வாழ்வேன்
தொலைவில் இருந்தாலும்
நெருக்கம் தோளின் சூட்டில்
உணரப்படுகிறது
💖 பக்கம் 358 / 478
📋 Copied