தொலைத்தூரத்தில்
இருந்தாலும்
அழகாகவே
காட்சி தரும்
நிலவைப்போல்
உன் நினைவும் அழகே
உறக்கத்தின் பின்னும்
உறங்காமல் வளர்கிறது
நம் காதல்
விலகாத
உன் பிடிக்குள்
என் இதயத்தில்
வீற்றிருக்கும்
உனக்காகவே
என் ஆலாபனைகளும்
என்னவனே
மனதை இரும்பாக்கி
கொண்டாலும்
இழுக்கின்றதே
உன்திசை நோக்கி
உன் நினைவும்
என்ன காந்தமா
பஞ்சணையில் இல்லாத
மென்மை
உன் நெஞ்சணையில்
உறக்கமும் வருடுது
கண்களை மயிலிறாகாய்
உதடுகள் பேசுவதற்கு
முன் கூட உடல் தன்
ரகசியத்தை வெளிப்படுத்தும்
ஆசை சில நேரம் பாவமல்ல
அது உயிரின் அதிர்வு
நெற்றியில் இருக்கும்
சிவப்புப் பொட்டு நீ
என் பெண்மைக்கு
நீ தந்த பரிசல்லவோ
கணவனே என்
ஆருயிர் காதலனே
நீ வா(சுவா)சிக்க
மட்டுமே
மலர்ந்தது இந்த
சிவப்பு ரோஜா
சத்தமின்றி இதயத்தை
துளைக்கும்
உன் மௌனத்தை
விடவா
ஒரு கூர்மையான
ஆயுதம் இவ்வுலகில்
இருக்கப்போகிறது
💖 பக்கம் 323 / 478
📋 Copied