எண்ணிக்கையை
கணக்கிட்டால்
பல நூறுகளை
கடந்துவிடும்
ஒரு பொழுதில்
நான் உனை
நினைத்து
கொண்டிருப்பது
காதலுடன்
நிலவை அழகாக்கும்
இரவைப்போல்
மனதை அழகாக்குகிறது
உன் நினைவு...
நேரில் பார்க்க ஆசை
பார்க்க முடியவில்லை
கண்கள் இரண்டும்
உன்னையே தேடுகிறது
மூச்சுகளுக்குள்ளே
கலையும் அந்த ஓசை
நெருக்கத்தின் இயற்கை இசை
நீ மூச்சி
காற்றுப்படும் தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா தேசத்திலும்
உயிர் வாழ்வேன்
நீயில்லா ஒவ்வொரு பொழுதும்
நம் நினைவுகளைத் தவிர
வேறு எதற்கும்
அனுமதி இல்லை
என் அருகில்
கண்களுக்கும்
சிவ ராத்திரி
உன் மௌனத்தால்
தனித்து சென்றாலும்
துரத்தி வருகிறாய்
நினைவாகி என்னை
ஆசை தீண்டிய பார்வை
உடலை மட்டுமல்ல
ஆன்மாவையும் எரிக்கிறது
வேறெதுவும்
வேண்டாம்
என்னவர்
ஆயுள்வரை
என் ஆயுளையும்
நீடித்துவிடு போதும்
💖 பக்கம் 319 / 478
📋 Copied