பார்வையில் விழுந்த
ஒரு நொடிதான்
வாழ்க்கையை மாற்றியது
தெளிவற்ற நிலையிலும்
தெளிவான உன் ஞாபகங்கள்....
(மலரும் நினைவுகள்)
உன் வருகையறிந்து
மல்லிகையும்
மயங்கிக்கிடக்கு
எனை
முந்திக்கொண்டு
நாணத்தில்
தலை கவிழ்ந்து
அன்பு பேசும் சத்தம் இல்லை
அது உள்ளுக்குள் நிலைத்திருக்கும்
உன்னை நினைத்து
அழும்போது
வரும் கண்ணீர் கூட
கரும்பைப் போல
தித்திக்கும்
ஏன் என்றால் நினைவில்
நீ இருப்பதால்
கையில் பிடிக்காமல்
மனதில் பிடித்துவைத்ததே
உண்மை காதல்
பயணிப்போம்
ஒரு பயணம்
கரம்பற்றி
களைப்பாகும்
வரை
காதல் தேசத்தில்...!
வெட்கத்தை மூடி மறைக்க
முடியாமல் உன் அணைப்புக்குள்
இடம் தேடி மொத்தமாய்
உன்னுள் கரைந்து போகிறேன்
கனவு இல்லாத
இரவுகள் கூட இருக்கலாம்
ஆனால் உன் நினைவுகள்
இல்லாத இரவுகள் இருக்க
வாய்ப்பே இல்லை
மௌனத்தை மூடியது
ஒரு முத்தம்
அதற்குள் கதைகள் நூறாயிரம்
💖 பக்கம் 310 / 478
📋 Copied