மழை பெய்தாலும்
அவளின் நினைவு தான்
நனைக்கிறது
சிரிப்பின்
ஒரு சின்னத் தீப்பொறி
மனதின் இருளை
கரைத்து ஒளியாய் பரவுகிறது
நீ அருகில் வந்த
ஒவ்வொரு நொடியும்
மனசு காதலுக்கும்
ஆசைக்கும்
நடுவில் தடுமாறுது
விழிகளை மூடியும் நினைவில்
தவிக்கும் தூரம்தான் ரோமான்ஸ்
சிணுங்கி கொண்டே
இருக்கிறது உன் கைகளில்
மட்டுமல்ல என் கண்களிலும்
தான் அழகிய உன்
கண்ணாடி வளையல்கள்
அழகான நினைவுகள்
காதலை மீண்டும் மீண்டும்
உயிர்ப்பிக்கின்றன
கல்லுக்குள் ஈரமாய்
கண்ணுக்குள்ளும்
காதலுண்டு
நீ உணர்வாயா
என்னுயிரே
காலம் காத்திருப்பது இல்லை
ஆனால் நம்மை நேசிக்கும்
உண்மையான இதயம்
நமக்காக நிச்சயம் காத்திருக்கும்
சந்திரனைப் பார்த்தால்
அழகென்று நினைப்பேன்
ஆனால் நீ வந்தால்
அந்த ஒளியே தேவையில்லை
நீ இல்லாத
தருணங்கள் கூட
தனிமை என்பதை
யான் அறியேன்
அப்போது
உன் நினைவுகளில்
நான் மூழ்கியிருப்பேன்
💖 பக்கம் 309 / 478
📋 Copied