உலகில் உள்ள அனைத்து
பூக்களின் வாசங்களும்
சற்று குறைவு தான்
உன் கூந்தல் சூடி பின்
வாடிப்போன அந்தப்
பூக்களின் வாசத்தின் முன்
என்
ஒவ்வொரு
நொடியின்
தொடக்க
புள்ளி நீ
நதி கடலைத்
தேடுவது போலல்ல
என் காதல்
அது கடலினுள்ளே
கலந்த மழையைப் போல
பிரிக்க முடியாத பிணைப்பு
இதயம் ஒருவரை
நினைக்கும் போதும்
உலகம் மெதுவாக
இயங்கத் தொடங்குகிறது
அன்பு எவ்வளவு அழகானது
என்று உள்னிடம் அறிந்தேன்
அன்பு எவ்வளவு வலிகள
தரும் என்பதையும்
உன்னிடமே அறிந்தேன்
நகர்ந்திடாதே
நீயும் சற்று
உறங்கி கொள்கிறேன்
நானும்
உன் விரல்களின்
பிடிக்குள்
மௌனத்துக்குள் பிறந்த ரொமான்ஸ்
இசைக்கும் முன்னதாகவே
நெஞ்சை குழப்புகிறது
இறுகப் பற்றும்
உன் விரல்கள்
உணர்த்துவதெல்லாம்
உனக்குள்
நான் என்பதே
உன்னிடம் பேசும்
ஒரு நொடி கூட
ஒரு முழு வாழ்க்கையை
போல் உணர்கிறேன்
சுவாசம் பகிர்ந்த தருணம்
காலத்தை நிறுத்தி விடுகிறது
💖 பக்கம் 311 / 478
📋 Copied