உன்னை நினைத்தாலே
மனதில் பூக்கள் மலர்கின்றன
இருளை பூசிக்கொள்ளும்
இரவாய்
மனதை சூழ்ந்து
கொ(ல்)ள்கிறாய் நீ
உதடுகள் நெருங்கும் அருகாமை
இரவின் தாளத்தை
முற்றிலும் மாறச் செய்கிறது
உன் வர்ணனைக்காகவே
எனை வர்ணித்து
கொள்கிறேன்
ஆவலாய்
மழை பெய்யும் நேரத்தில்
மனம் மட்டும்
அவளை நினைக்கிறது
கவிதையெழுத
சிந்தித்தால்
சிந்தைக்குள்
நீ வந்துவிடுகிறாய்
கவிதையாக...
எதேட்சையாக ஏனும்
கண்ணில் பட்டுவிடாதே
உனை எதிரெதிரே
சந்திக்கும் வலிமை
எனக்கில்லை
மனது இடம் கொடுத்ததால்தான்
ஒரு நிழலும் உயிர்பெற்று காதலானது
கைகளில்
கனஏட்டை தாங்கியிருந்தாலும்
என் மன ஏடு
ஏந்தியிருப்பது உனையே
நெருக்கம் அதிகரிக்கும் போது
நேரமும் மெதுவாக நடக்கிறது
💖 பக்கம் 308 / 478
📋 Copied