சுவாசிக்க கூட மறந்து விட்டேன்
அணைத்த ஒவ்வொரு கணமும்
ஒரு கவிதை போல
தளர்ந்து கொண்டிருக்கிறது
பிடிவாதம்
சற்று நகர்ந்து
கொ(ல்)ள்
மீட்டு கொள்கிறேன்
எனை உன்னிடமிருந்து
கண்ணீரோடு
நினைவில் இருக்கும்
ஒரே பெயர் காதல்
என் கண்ணீரில்
புரியாத உணர்வா
உனக்கு என் கவிதைகளில்
புரிந்துவிட போகிறது
பருகாமலேயே சுவைக்கிறது
உன்னிதழ் பட்ட தேனீர்
எனையும் ருசிக்க தூண்டி
தித்திக்கும்
உன் நினைவுகளோடு
ஒரு நொடி
தோள் கொடு
என் பல வருட
கனவை
நனவாக்கி கொள்ள
அருகில்
நீயில்லையென்று
மனதுக்கு தெரிந்தாலும்
எங்கோ உன் பெயர் ஒலிக்க
விழிகளும் தேடவே
செய்கிறது உன்னை...
நீ என் மீது வைத்த காதல்
என் வாழ்க்கையின் விளக்காக மாறி
என்னை இருளிலிருந்து
வெளிச்சத்திற்கு அழைத்தது
ஒருவர் சொல்வதைக் கேட்பதற்கும்
உணர்வதை படிப்பதற்கும்
வித்தியாசம் உள்ளது
உன் கண்கள் பேசும் மெளனத்தை
நான் காதலிக்கிறேன்
காலம் காத்திருப்பது இல்லை
ஆனால் நம்மை நேசிக்கும்
இதயம் நமக்காக
நிச்சயம் காத்திருக்கும்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
💖 பக்கம் 306 / 478
📋 Copied