💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
நிழலாக கூட
நீ என்னை தழுவும் போது
இரவும் ஒரு காதல் கவிதை ஆகிறது
content_copy
காதல் என்பது ஒரு கலை
இதயம் தான் அதன் ஓவியர்
content_copy
நீ பேசும் சில நொடி நேரங்களுக்காக
பல மணி நேரம் காத்திருக்கும்
அந்த நொடிகளுக்கு தெரியும்
நான் உன் மீது கொண்ட
பாசத்தின் உச்சம்
content_copy
இருவர் சேர்ந்து
பயணித்த பாதை
இப்போது தனிமையின்
தேசத்தில் முடிகின்றது
content_copy
உன் வருகைக்காக நான்
காத்திருந்த நாட்கள் என்
வாழ்வில் ஏமாற்றம் என
நான் எழுதி வைத்த நாட்கள்
content_copy
மனதையும்
கலைத்து விட்டு
சென்று விட்டாய்
எண்ணிக் கொண்டிருக்கிறேன்
நிமிடங்களை
மீண்டும்
உன் விளையாட்டுக்கு
காதலுடன்
content_copy
தனிமையையும்
விரட்டி விடுகின்றாய்
நீ நினைவாய்
மன நிறைவாய்
வந்து என்னில்
content_copy
காதல் என்பது ஒரு மலர்
அதன் மணம் என்றும் மறையாது
content_copy
தூரம் இருந்தாலும்
நினைவில் தீண்டும்
தோழமை காதலை விட
வலிமையானது எதுவும் இல்லை
content_copy
வேரூன்றி
விட்டாய் மனதில்
வேறெங்கும்
நகர்வதில்லை
என் எண்ணங்களும்
உனையன்றி
💖 பக்கம் 304 / 478
arrow_back
arrow_forward
📋 Copied