உன் நினைவு
என்னைத்தீண்ட
பூக்களும்
நாணம் கொண்டு
தலைசாய்கிறது...
விரல் தொடும் அருகில்
இல்லாவிட்டாலும் தினம்
தினம் மனதைத் தொடும்
உன் நினைவுகளுடன் நான்
மனதிலும்
ஒரு காதல் கீதம்
சலங்கை ஒலியாய்
உன் கரம்
மா(மீ) ட்ட
போர்வை நீயென்றால்
அதில் அடங்கிக்
கிடக்கும்
உறக்கம் நானாவேன்
உன் கண்களில்
நான் காணும் விண்மீன்கள்
என் இரவுகளை
ஒளி நிறுத்தும் கனவுகள்
ஆன்மா தேடும் இசைதான்
உண்மையான காதல்
மனம் மட்டும் காதலிக்காது
சில நேரம்
உடலும் பேச நினைக்கும்
எல்லைக்குள்
வைத்திருந்தாலும்
நீயென்று வரும்போது
மனம் எல்லையை
தாண்டுகிறது
உனக்காக நான்
ரசிப்பதனைத்தின்
ரசனையாய்
நீயே கலந்துள்ளாய்
என்னுயிரே
ஆயிரம் இரவுகள்
காத்துக் களைத்து
போனது என் இதழ்கள்
உன் இதழ் முத்தம்
இல்லாமல்
💖 பக்கம் 301 / 478
📋 Copied