உன் வசீகர
பார்வையில்
சுவீகரித்து கொ(ல்)ள்கிறாய்
எனை காதலால்
கள்வனே
உன் நினைவுகள்
எனக்கு இனிமையான
துன்பத்தை தருகிறது
தொலைதூரம்
நீ போனால்
உன்னை தேடி
வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்..
காற்று கூட
அவளின் வாசனையால்
மயங்கும்
இரவு முழுக்க
பேசிக்கொண்டிருந்தாலும்
உன் அருகில்
இன்னும் கொஞ்சம்
இருக்கணும் என்பதே
என் காதல்
இதயம் சுயமாக
தேர்ந்தெடுக்கும் நபரே
வாழ்க்கையின் அழகான பழக்கம்
உன்னுடன் பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
என் இதயத்தின் இசை
கைகள் தொடாமல்
மனங்கள் இணையும் காதலுக்கு
வார்த்தைகள் தேவையில்லை
சிரிப்பில் தங்கிய பாசம்
மனதின் ஆழத்தில் வீடு கட்டுகிறது
என்ன தவம் செய்ததோ
உன் தொடுதிரை
அலைபேசி நித்தமும்
உன் விரல்கள் தீண்டுவதற்கு
💖 பக்கம் 299 / 478
📋 Copied