ரசிக்க ரசிக்க
சலிக்காத
கவிதை நீ
என் கண்களுக்கு
மையும் சொல்லும்
உன் மீதுள்ள
மையல்களை
கவிதையாய் கரைந்து
விழிகள் எழுத
இந்த உலகில் ஒவ்வொருத்தரும்
எதோ ஒன்றிற்கு அடிமையாகி
இருக்கிறார்கள் நானும்
அடிமை தான் உன் அன்பிற்கு
உன்னைக் காண
அடம்பிடிக்கும் மனதை
சமாளிக்கிறேன் நீ வருவாயென
மின்னஞ்சலின் எழுத்துகளில்
உன் இதயத்தை கண்டேன்
கண்ணோட்டத்தில்
கவிதை பிறக்கும்போது
அது காதல் தான்
காதல் கற்றுத்தந்த நீ
தனிமை கற்று தந்தாய்
பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட
ஒரு நினைவின் வெப்பமே
நாள் முழுவதும்
துணையாக நிற்கும்
போர்க்களமின்றி
யுத்தம் செய்யும்
வித்தை
உன் விழிகளுக்கே
உண்டு
💖 பக்கம் 298 / 478
📋 Copied