இந்த நொடி
நீளாதா
என்று மனதை
தவிக்கவிடுகிறாய்
சுகமாய்
என் கண்களுக்கு
நீ காட்டிய அழகை விட
என் உள்ளத்துக்கு
நீ காட்டிய
அன்பே உயர்ந்தது!
மணப்பெண்கள்
தாலி கழுத்தில்
ஏறும் நொடி
கண்ணீர் சிந்துவது
இறந்து கொண்டிருக்கும் தன்
காதலை நினைத்துக்கூட இருக்கலாம்
என் இதயம் துடிக்கிறதோ
இல்லையோ நன்றாக
நடிக்கிறது உன்னை
மறந்து விட்டேன் என்று
இரவுக்கு
விடை கொடுத்தபோதும்
உன் நினைவுக்கு
விடைகொடுக்க முடியவில்லை
மூச்சுகள் கலக்கும் இடத்தில்
சொற்கள் தேவையில்லை
வானத்தில்
நட்சத்திரங்கள் போல்
காதலும் மனதைக் கவர்கிறது
மனதில் மலரும் ஒரு நிழல்
வாழ்க்கையைப் பூர்த்தி செய்கிறது
உன் வரவின்
தாமதத்தை
நகர்த்தி கொண்டிருக்கிறேன்
ஏதோவொரு தேடுதலில்
உனில் தொலைந்தே
என் அன்பை
சுவாசிக்கும்
உயிராகவே இருந்திடு
உன் சுவாசத்தில்
கலந்த உறவாகவே
நானும் வாழ்ந்திடுவேன்
💖 பக்கம் 297 / 478
📋 Copied