இரண்டு இதயங்கள் பேசும் போது
வார்த்தைகள் தேவையில்லை
சிரிப்பு மௌனத்தை
உடைக்கும் போது
காதல் பிறக்கிறது
உன் கண்களில்
நான் காணும் அன்பே
என் வாழ்கையின் ஒளி
தோளில் சாயும் கணம்
வாழ்நாள் முழுவதும்
மறக்க முடியாத
கவிதையாக மாறுகிறது
கைகளின் வசீகரம்
சுவாசத்தின் மயக்கம்
இருவருக்குள் ஒரு மாயம்
காதல் என்பது
கண்கள் பார்க்கும் அழகு அல்ல
இரு உள்ளங்கள் இணையும் இசை
தொடுக்கின்றாய் அழகாய்
தொடுத்திரையில்
வார்த்தைகளை
தொற்றி கொல்(ள்)கிறது
நாணமும்
நீ தொடாமலேயே
கை தொடும் வெப்பம்
இதயத்தின் ரகசிய துடிப்பை
வெளிப்படுத்துகிறது
தழுவலின் வெப்பம்
சில நேரம் வாழ்கையின்
அர்த்தம் என்று உணர்த்தும்
என் வாழ்க்கையின்
ஒவ்வொரு பகுதியிலும்
உன் நினைவுகளே
எனது காதல்
சிந்தனைகளின் வழிகாட்டி
💖 பக்கம் 292 / 478
📋 Copied