காதல் எல்லோரையும் வாழ
வைத்தது என்னை மட்டும்
ஏன் அழவைக்கிறது
கண்களுக்குள்
மாயங்கள் செய்கின்றாய்
பார்வையில் சிக்காமல்
தோளில் சாய்ந்த கனவு
நிஜத்தை விட
இனிமை தருகிறது
அன்பு எதையும்
வெல்லும் என்பதை
நிரூபிக்கும்
சோதனையே தூரம்
மேடு பள்ளமென
சந்தித்தாலும்
அழகாய் ஓடும்
நதியாய்
என் மனமும்
நீந்துகிறது உன்னில்
நினைவு வந்தால் சிரிப்பு
காணாமல் போனால் வலி
கூந்தலை பிடித்திழுத்து
விளையாடி ஜிமிக்கியும்
உன்னை அடிக்கடி
ஞாபகபடுத்துது
நீ அருகில் இருந்தால்
சாதாரண நொடிகளுக்கே
கவிதை பிறக்கிறது
நீ கோர்த்து
விட்ட மோதிரத்தில்
பூத்து குலுங்குது
நம் காதல்
உன் தோளில் சாய்ந்த
அந்த சில நிமிடங்கள்
வாழ்க்கை முழுக்க
கிடைக்காத அமைதியை கொடுத்தது
💖 பக்கம் 291 / 478
📋 Copied