நாம் நேசிப்பவர்
நம்மையும் நேசித்தால்
அதை விட சந்தோஷம்
வேறு எதுவும் இல்லை
சொற்கள் இல்லாமல்
பேச வைக்கும்
சக்தி தான் காதல்
உன் விழிகளெனை
நேசித்தால்
என் விரல்களும்
வாசிக்கும் காதலிசை
கண்ணெதிரே
நீயிருந்தால்
என்னுள்ளத்திலும்
தினமும் கார்த்திகை
தீபம்தான்
(இருளில்லா)
தூரத்தில் இருந்தபோதும்
இதயத் துடிப்பு ஒன்றேபோல்
இணைவது காதல்
முகம் தெரியாத
உன்னை காதலிக்கிறேன்
நீ என் முகவரியாய்
வருவாய் என
உன்னை தேடி தேய்கிறேன்
ஒரு நிலவை போல
நீ எனக்கு ஒரு கனவின் சித்திரம்
அதை உண்மையாக மாற்ற
நான் உன்னுடன் இருக்க வேண்டும்
எண்ணற்ற நட்சத்திரங்களை
கூட எண்ணி
முடித்து விடலாம்
மிகவும் எளிதாக எனினும்
உன் பார்வை என்னவென்று
எண்ண முடியாது
தவிக்கிறேன் நான்
(சு)வாசிப்பது
நீயென்றால்
கவிதையாய்
நானிருப்பேன்
உடல் நெருக்கமில்லை
ஆனாலும் எண்ணங்கள்
அவளில் சிக்கின
💖 பக்கம் 281 / 478
📋 Copied