என் நாழிகையில்
தவிர்க்க முடியாத
நொடிகள் நீ
பார்த்த ஞாபகம
என்னுள் சிறகடிக்கிறது
உன்னை பார்க்காத போதும்
ஒரு கணம் கூட
அவளின்றி கழிக்க முடியாத
பிழைபடம் போல் வாழ்கிறேன்
மறைக்க முடியாத
ஆசையின் வெப்பம்
நினைவுகளை மீறி
உடலின் எல்லைகளை
தாண்டிச் சென்று எரிகிறது
யாருமற்று
வெறிச்சோடி கிடக்கும்
மொட்டை மாடியாய்
மனம் நீயில்லா
பொழுதுகளில்
கண்கள் பேசும் மொழி
காதலை சொற்களிலிருந்து
மீட்டெடுக்கிறது
உன் காதல்
எனக்கு சொந்தமானது
என்று நினைக்கும்
ஒவ்வொரு கணமும்
வாழ்க்கையின்
மிகப்பெரிய சுகம்
ஏட்டில்
பலவரி கவிதை
கிறுக்கினாலும்
எப்போதும்
பிடிக்கும் நெற்றியேட்டில்
என்னவன் கிறுக்கும்
இருவரி கவிதை
என்னை மறந்து
கொஞ்ச நேரம்
உலகை ரசிக்க
நினைத்தால்
அங்கும் வந்துவிடுகிறாய்
நானே...
உன் உலகமென்று
விடியலின் ஒளியில் கூட
அவளின் சிரிப்பு வெல்லும்
💖 பக்கம் 278 / 478
📋 Copied