மனதையும்
கலைத்து விட்டு
சென்று விட்டாய்
எண்ணிக் கொண்டிருக்கிறேன்
நிமிடங்களை
மீண்டும்
உன் விளையாட்டுக்கு
காதலுடன்
என் இதயம் துடிக்கிறதோ
இல்லையோ நன்றாக
நடிக்கிறது உன்னை
மறந்து விட்டேன் என்று
கண்கள் சந்திக்கும் தருணம்
உணர்வுகள் திசைமாறும் இடம்
மறைந்தாலும்
தோன்றுவேன்
தேயும் நிலவாய்
அல்ல துளிர்விடும்
நினைவாய் உன்னுள்...
இரவு நீளும் போது
பார்வைகள் மௌனமாக
காதல் பேசுகின்றன
சிரிப்பு பிறக்கும் கணம்
காதல் நெஞ்சை
நிரப்பும் தருணம்
எண்ணத்தில் இருப்பதை
என்னில் கிறுக்கி
எனையும்
கிறுக்காக்குகிறாய்
கிராதகா
சில வார்த்தைகள் பேசாமல்
உன் மௌனமும்
என் இதயத்தை
கலங்க வைக்கிறது
மிகவும் நெருக்கம் வந்தால்
வார்த்தைகள் தேவையில்லை
நம் அன்பு மொழியற்றது
ஆனால் நம் இதயங்கள்
பேசிக் கொண்டிருக்கின்றன
💖 பக்கம் 277 / 478
📋 Copied