உதடுகள் தேடும் நிமிடம்
ஆசை தீயின் சுடராக மாறுகிறது
அன்பில் நிரப்புகிறாய்
மனதை என்றும் வற்றாத
நிறைகுடமானது
நம் வாழ்க்கை
அள்ளிக் கொள்கிறேன்
எனக்கான தாகமென
உன் நேசத்தை
கணவனின் மௌனம்
மனைவியின் புன்னகை
இரண்டும் அன்பின்
மொழிகள்
தேநீரில்
கரைந்த சக்கரையாய்
கலந்துவிட்டாய்
என்றும் திகட்டாத
தித்திப்பாய் மனதில்
அவன் தரும் பரிசுகளில்
என்றும் நான் விரும்புவது
காதலுடன் அவன்
வைத்து விடும்
ஒரு முழப் பூவே
அவளின் மௌனம்
பேசும்போது மொழிகள்
தோல்வியடைகின்றன
மௌனத்தின் உச்சியில்
தோன்றும் சிரிப்பே
உண்மையான காதல்
வாசிப்பது நீயென்றால்
யோசிக்காமல் எழுதுவேன்
கண்களிலும்
மை கொண்டு
பல கவிதைகள்
துணை என்பது
என்னோடு நிற்பவன் அல்ல
எனக்காகவே நிற்பவன்!
💖 பக்கம் 277 / 478
📋 Copied