எந்த மலரிலும்
உணரவில்லை
நீ கொடுத்த இந்த....
பூவின் நறுமணத்தை
இரவின் அமைதியை
உடைக்கும் மூச்சுகள்
இதயங்களை ஒன்றாக
கட்டிப்போடுகின்றன
மிக அருகில் இருக்கும்போதும்
காதல் ஒரு தூரத்தை
ஆசையாக வைக்கும்
மூச்சின் வேகத்தில்
கலக்கும் வெப்பம்
இரவின் அமைதியை
உடைத்து ஆட்கொள்கிறது
பாதி நீ பருக
முழுதாய்
நான் சுவைத்துக்
கொண்டிருக்கிறேன்
மீதியை
உன்னிதழ் சுவையோடு
இரவின் அமைதியில் கூட
இதயம் காதலின் இசையை கேட்கிறது
மழை வீழ்வதை விட
ஒரு மௌனக் கண்விழி
அதிகமாக நனைக்கும்
கண்கள் பேசும்போது
வார்த்தைகள்
வாடை போலவே மாயமாகும்
காதல் மொழிகளை
கேட்க வேண்டாம்
இதயம் சொல்லும்
ஓசையை கேளுங்கள்
எப்பொழுதும்
பற்றாக்குறையாகவே உள்ளது
உன் அருகாமையும்
உன் காதலும்
உன் முத்தமும்
உன் தீண்டலும்
💖 பக்கம் 268 / 478
📋 Copied