உன்னோடு பேசாத
நொடி கூட
என் இதயம் ஓயாத
ஓசை போல இருக்கிறது
என்னோடு காத்திருந்து
நிலவும் தேய்ந்துப்போகிறது
உன்னை காணாது...
மனதில் இடம் கொடுத்தவனை
நினைவிலிருந்து நீக்க முடியாது
உள்ளங்கையில்
வெப்பம் ஏற்றுகிறாய்
மெல்ல குளிருது
உள்ளமும்
மனமும் எப்போதும்
மார்கழி தான்
உன் அன்பின்
சாரலில்
நனைந்துகொண்டே
இருப்பதால்
குளிர்மையாய்
உன்னிதழ்
சுவைத்த தேனீர்
என்னிதழை
நனைக்க கரைந்தது
ஊடலும்
நிமிடங்கள் போகலாம்
ஆனால் ஒரு தீவிரமான முத்தம்
ஆண்டுகள் முழுவதும்
நினைவில் இருக்கும்
காதல் என்பது
அழகின் பொருள் அல்ல
அது மனசின் பொக்கிஷம்
ஆலயத்தில் சிறப்பு
மணியோசையாய்
மன ஆலயத்தில்
சிறப்பு
உன் நினைவோசை
இசைக்கும்
இன்னிசையாய்
திரும்பி பார்ப்பதும்
விரும்பி கேட்பதும்
உன் பெயர்
ஒலிக்கும் போதே
💖 பக்கம் 261 / 478
📋 Copied