தொடாத விரல்கள்
நினைவுகளால் எரியவைக்கும்
காதல்தான் ஆழம்
உன் பேசும்
கண்களின் முன்
நானும் பேசா
மடந்தை தான்
காதலில் மூழ்கி
சுவாசத்தின் வேகம்
ஆசையின் அடையாளம்
நானுன்னை
நினைப்பது போல்
நீயுமென்னை நினைத்து
கொண்டிருப்பாய்
அல்லவா அன்பே
காத்திருந்த தவிப்பெல்லாம்
காதலாகி கண்களையும்
மறைக்குது நாணம்
நீ கண்ணெதிரே வர
பேசுவதை கேட்கவே
நேரமில்லை என்றபின்
அங்கு கொஞ்சினாலும்
கெஞ்சினாலும் எந்த
பயனும் இல்லை
கண்கள் பேசும் நொடியில்
இரு உயிர்கள் வார்த்தையின்றி
காதலின் ஆழத்தில்
கரைந்து ஒன்றாகின்றன
இரண்டு விரல்கள்
சேரும் போது
தோன்றும் அதிர்ச்சி
காதலின் வினையெதிர் சக்தி
மனதுக்குள்
மலர்ந்தாய்
மலராய்....
மனமெங்கும்
மணக்கின்றது
உன் வாசனை....
துடிப்பின் வேகம் கூட
காதலரின் அருகில்
மெதுவாகிவிடுகிறது
💖 பக்கம் 260 / 478
📋 Copied