கோர்த்து வைத்த
வார்த்தைகளை
சேர்த்திட துணிவில்லை
உன் கண்கள் பேச
சிரிப்பு ஒன்று இதயத்தில்
மழையாக பொழிகிறது
இந்த ஏமாற்றத்திற்கும்
வலிக்கும் காரணம் அன்று
உனக்காக என்னை மாற்றிக்
கொண்டது மட்டுமே
நேரம் நின்றது
போலத் தோன்றும்
ஒவ்வொரு கணம்
அவள் பார்வையில் சிக்கியதும்
இதயம் சிலரை
காணாது நினைத்து விடும்
நீர் துளி
தீண்டிய பாதமாய்
சில்லிடுகிறது மனம்
உன் கரம் தீண்ட
காதல் மெல்லிய
தீயாக இருக்கலாம்
ஆனால் காமம் அதில்
பிரம்மாண்டமான
வெப்பத்தை சேர்க்கும்
எதிர்பார்பென்று
எதுவும் இருந்ததில்லை
உன்னை காணும்
வரையில் என்னுள்
இதயம் ஒருமுறை
சொன்ன உண்மை
ஆயுள் முழுக்க ஒலிக்கிறது
இதழ்கள் பேசாத உணர்வுகளை
பார்வைகள் எல்லாம்
சொல்லிக்கொள்கின்றன
💖 பக்கம் 259 / 478
📋 Copied