காதல் ஒரு வார்த்தை இல்லை
அது மூச்சில் கலந்த
மௌன உரையாடல்
உன்னில் பாதியான
பின்னே என்னுள்
நான் முழுமையானேன்
காதல் ஓர் பயணம் இல்லை
அது ஓர் இமையாத கனவு
இந்த நேசம்
கூட புதுமை தான்
நித்தம் தொலைகிறதே
மனமும் உன்னில்
காதலில் நேரம் நின்றாலும்
மனம் எப்போதும் பறக்கிறது
யோசித்து எழுதவில்லை
நேசித்து எழுதுகிறேன்
உனை சு(வா)சித்து
கொண்டிருப்பதால்
என்னுள்
இடைவெளி வலியை
தருமென தெரிந்தும்
பிடிவாதமாய் அனுபவித்து
இருக்கிறோம் இருவரும்
மூச்சின் அருகாமை கூட
காதலை ஆழமாக
உணர வைக்கிறது
இரவு நிலவின் ஒளியிலும்
உன் பார்வை தான்
என் கனவின் விளக்கு
வாய்கள் பேசாமலே
விரல்கள் இசை பாடும் போது
காதல் சங்கீதமாய் உருகுகிறது
💖 பக்கம் 26 / 478
📋 Copied