இதயம் சிலரை நினைக்கும் போது
நேரம் தன் பாதையை மறக்கிறது
மௌனத்தில் பேசும் வாசனை
ஆசையின் அழுத்தமான மொழிபெயர்ப்பு
சிரிப்பு ஒரு நொடி
ஆனால் மனம் அதை
ஆயிரம் முறை நினைக்கிறது
மொத்த உலகமும்
அழகாய் தோனுது
சட்டென
உன் நினைவுகள் தீண்ட
கண்ணில் காயம் இல்ல
ஆனால் உதிரம் போல
காதல் சொட்டுகிறது
நினைவுகள் சிலரை
மறக்க முடியாத
சிறைச்சாலையாகி விடும்
தொடு திரையிலும்
தொட்டிழுக்குறாய்
மனதை
காந்த பார்வையில்
மழை முத்தமிட்டு எழுப்பும்
மண்வாசனையை போல
என் சுவாசக்காற்றை முத்தமிட்டு
என்னை எழுப்பிச் செல்கிறது
உன் யோசனை
விதி வரைந்த
கோடுகளை விட
உன் விரல்கள்
கோர்த்த பிணைப்பே பலமானது
அது காலத்தைக் கடந்த
ஒரு காவியம்
காதலின் நெருக்கத்தில் தான்
மௌனமும் ஒரு மொழி ஆகிறது
💖 பக்கம் 25 / 478
📋 Copied