மன கிளையில்
படர்கிறாய்
கொடியாக
உள்ளமும் அசைந்தாடுது
ஊஞ்சலாய்
ஒருமுறை உனை காண
பலமுறை காதல் மனு
கொடுக்கிறேன் கடவுளிடம்
கருணை காட்டென்று
முகம் நெருங்கும் போதெல்லாம்
இதயமோ தவிக்க ஆரம்பிக்கிறது
நட்சத்திரம் நிறைந்த இரவிலும்
என் பார்வை உன் முகத்தின்
ஒளியைத்தான் தேடுகிறது
தேநீரில் கரைந்த
சக்கரையாய்
கலந்துவிட்டாய்
என்றும் திகட்டாத
தித்திப்பாய் மனதில்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் அழகியே
தனிமை இரவானது
கற்பனை உறவானது
கவிதை அணைப்பானது
உறக்கம் துறவானது
உன் நினைவுகள்
வரமானது
மூச்சுகள் கலந்து
செல்லும் தருணம்
ஆன்மாவையே உருக வைக்கும்
கணவன் சிறியதாய்
எது வாங்கி கொடுத்தாலும்
பெரிய சந்தோஷம்
தான் மனைவிக்கு
ஒரு முத்தம்
அன்பின் மொழியில்
சொல்ல முடியாத
அனைத்தையும் சொல்கின்றது
மழையிலும் ஒளிவிடும்
தீபம் போல
காதலிலும் ஒரு
நீரான தீ உண்டு
💖 பக்கம் 257 / 478
📋 Copied