நீ பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
என் மனதில்
மழையாக விழுகிறத
தனிமையின்
கொடுமையும்
இனிமையானது
நீ தென்றலாய்
மனதை தீண்ட
பார்க்க
மறுத்த விழிகளும்
காத்துக்கிடக்கு உன்னன்பில்
தொலைந்து...!
அச்சத்தையும்
மிச்சம் வைக்காமல்
உச்சம் தொட்ட
உன்னிடம் கேட்பது
இந்த முத்தம் மட்டுமே
அதுவும்
நித்தம் வேண்டுமே
மழைத்துளி விழும் சத்தம் கூட
இரு இதயங்களின் துடிப்பில்
மறைந்து விடுகிறது
உன்னுடன் பேசும்
சில நொடிகள்
நாள் முழுக்க இருந்த
சோர்வை மறக்க வைக்கிறது
இதயத்தில் விதைக்கப்படும் பாசம்
காலம் கடந்து கூட மலர்ந்து
மனதிற்கு ஆறுதலாகிறது
உன் வார்த்தைகளின்
வசீகரம் எனையும்
ஊமையாக்குகிறது
ரசிக்க தூண்டி
உன் மீதுள்ள
காதலை
மனதோடு
பூசிக் கொள்கிறேன்
அது வெட்கமாகிறது
அழகாய்
இதயத்தின் கதவைத் திறந்தவன்
அதில் நிரந்தர வாசி ஆகிவிடுவான்
💖 பக்கம் 256 / 478
📋 Copied