உன் நினைவின்றி
என் நொடிகள்
நகர்வதில்லை
தூரத்தில் நீயிருந்தால்
துயரத்தில் துடிக்குது
மனம்
தூரமது மாயமாய் மறைந்து
உன் விழிகளின் நர்த்தனமதில்
உறைந்து நான் போகும்
நொடிகள் நோக்கி நகர்கிறது
என் கடிகார முட்கள்
நெற்றி முத்தம்
உன் முதல் ஸ்பரிசம்
ஊடுருவுகிறது
மனமெங்கும்
நித்தம் விரல்
தொட்டிட பொட்டிட
கண்கள் மூடியாலும்
நினைவுகள் வருடும் போது
அது காதலின் ஆழம்
மௌனத்தை விரல்கள்
வாசிக்கும் பொழுது
காதல் மெழுகு போல உருகும்
உயிர்வரை சென்று
சுகமாய் எரிக்கும்
இவ் வெப்பம்
போதும்
பல நாட்கள்
நான் குளிர்
காய்ந்திட
அவனும் நானும் பேசிக்
கொள்ளவில்லை என்றாலும்
அவனை பற்றிய
நினைவுகள் போதுமானது
உறங்கும் அவளின்
விழிகளுக்குள்
உறங்காது உயிர்த்திருக்கும்
எனது நினைவுகள்
பார்வையோடு வந்த உணர்வை
வார்த்தையால் விளக்க முடியாது
💖 பக்கம் 251 / 478
📋 Copied