மௌனமான இரவில்
அவளது நினைவு
கண்ணை மூடச்செய்கிறது
ஆனால் கனவு விட மிஞ்சுகிறது
இரவின் அமைதியில்
மூச்சின் இசை
காதலின் கவிதை ஆகிறது
கை தொடும் அதிர்வில்
இதயம் தாளத்தை
மாற்றிக் கொள்கிறது
கனவா நிஜமா
என்றுணரமுடியா
இதமான
ஓர் உணர்வு
எதிர்பாரா
உன் அரவணைப்பு
என் காதலும்
அழகு தான்
உன் இதயமெனும்
கருவறைக்குள்
சுவாசிப்பதால்
மழை தொட்ட
மண் வாசனை போல
அவளின் நினைவு
இதயத்தில் கலந்திருக்கிறது
அழகான நினைவுகள்
காதலை நிரந்தரமாக்கும்
ஆனால் அவற்றை மறக்க
முடியாததும் உண்மை
என் அருகில் நீ
கனவு என்றால்
விழிக்க விரும்பவில்லை
நினைவு என்றால்
உன் அருகிலேயே
வாழ்ந்திட வேண்டுகிறேன்
காதல் என்பது
வார்த்தைகளால் புரியவைக்க
முடியாத உணர்வு
அது ஒவ்வொரு மௌனத்திலும்
அர்த்தமாய்ப் பிறக்கும்
மொழியில்லா
ஒரு தாலாட்டு
உன்னிதழின் முத்தம்
💖 பக்கம் 24 / 478
📋 Copied