கண்களுக்குள்
மாயங்கள் செய்கின்றாய்
பார்வையில் சிக்காமல்
அனைத்தும் நீயென்றவன்
அள்ளித்தந்து சென்றான்
அழகிய நினைவுகளை
நொடி நொடியாய்
ரசித்திருக்க
பாசம் வார்த்தைகளால்
சொல்ல முடியாத மென்மை
கண்கள் பேசும்
காதல் மொழி
வார்த்தைகளுக்கு
அப்பாற்பட்டது
மனதுக்குள் நினைத்தால்
என் முன் வந்து
விடுகிறாயே
நீயும் எனக்குள்
தான் எப்போதும்
இருக்கின்றாயா
கற்பனையிலிருந்தவன்
கண்ணெதிரே
தோன்றவும்
சொப்பனமோ
என்றெண்ணியது
மனம்...
என் பேனா முனை
வரைவதெல்லாம் ஓவியம்
என நினைத்திருந்தேன்
அவை யாவும்
கீறல்களாகவே மாறியது
என் வாழ்வில்
கலைந்த கனவுகளை
மீட்டுக்கொடு மீண்டுமொரு
கனவு காண
திரானியில்லை
கண்களுக்கு
காற்றலையில்
கலந்து வந்த
உன் குரல்
இதயத்தை
நனைக்க
மனமும் பூத்தது
பூஞ்சோலையாய்
வெறும் தோற்றத்தில்
இல்லை ஈர்ப்பு
அதற்கு உணர்வுகள்
ஓர் அடிப்படை
💖 பக்கம் 249 / 478
📋 Copied