தேய்பிறையாய்
நானிருந்தேன்
வள்ர்பிறையாய்
என் வாழ்வில்
வந்தாய்...
உன்னில் ஏக்கமென்று
எதுவும் இல்லாதபோதிலும்
ஏதோவொரு தாக்கத்தை
ஏற்படுத்ததான் செய்கிறாய்
உனை நினைக்க வைத்து
நினைவுகள் வந்து சேரும் தருணத்தில்
பாசம் அமைதியின் சூட்டாக
உயிரை தழுவிக்கொள்கிறது
உண்மையில் அக்கறை
கொண்ட இரு
இதயங்களை தூரம்
ஒருபோதும் பிரிக்காது
மௌனம் கூட
சில சமயம்
காதலின் இனிமையான ஒலி
என் தாகம்
அறிந்தாய்
எப்படி இப்படி
பருகுகிறாயே நீரை
விடியலின் முதல் ஒளி
அவளின் முகத்தில் தான் பிறக்கிறது
மூச்சின் மென்மையான இசை
காதலை காலமற்ற
பயணமாக மாற்றுகிறது
தடுத்த போதும்
நிறுத்த வில்லை
உனை எதிர்
பார்த்திருப்பதை
விழி
நீ சுவாசிக்கும் காற்றில் கூட
உன் காதலின்
துளிகளை உணர்கிறேன்
💖 பக்கம் 247 / 478
📋 Copied