அசைப்போடும்
நினைவுகளோடு
அசையாது காத்திருக்கு
விழிகளும்
பல ஆசைகள் கொண்டு
ஆவலோடு உனக்காக
காலத்தைக் கடக்கும் நினைவுகள்
ஒரே முத்தத்தில் உருவாகின்றன
விழித்த பின்னும்
மீட்டி கொண்டிருக்கு
விழிகள் வந்தது
நீயல்லவா கனவாய்
நாசிக்குள் நுழைந்து
உயிர்வரை சென்று
நேச உறவாடும்
உன் (சு)வாசத்தை
போல் எதுவும் போதை
தருவதில்லை எனக்கு
படிக்கும் எதுவும்
பதிய வில்லை
மனதில் கண்கள்
உனையே வாசிப்பதால்
பெரியதாய்
காரணம் ஒன்றும் இல்லை
உன் பிரிவு ஒன்றை
தவிர என் வலிகளுக்கு
அன்பை உதரி போக
தெரிந்த உனக்கு என்
மனசு வலிக்கும் என்று
ஏன் தெரியாமல் போனது
வாசல் மூடிய பிறகு மட்டுமே
காதல் முழுமையாக
தன்னை வெளிப்படுத்தும்
இன்னும்
சற்று நேரம்
துயில்கொள்
ரசித்து கொள்கிறேன்
உன்னை
எனை கொல்லுமுன்
உன் விழிகள்
தொட்டாலும் என்ன
நெருங்கினாலும் என்ன
காதல் தன்னைத்தானே உருக்கிறது
💖 பக்கம் 246 / 478
📋 Copied