உன்னெதிரே
நான் இல்லாத
வேளைகளிலும்
உன் விழிகளுக்குள்
வாழ்வதும்
நானென்றறிவேன்
என்னவனே
சொற்கள் பேசாது
ஆனால் பார்வை
எல்லாவற்றையும் சொன்னது
அன்பு என்பது
கையை பிடிப்பது மட்டும் அல்ல
மனதை தாங்கி நிற்பதும்தான்
முகவரி இல்லாத தேடல்
காதலாக இருக்கலாம்
ஆனால் முகமூடி
இல்லாத ஆசைதான்
உண்மையான வசீகரம்
காலம் கடந்தாலும்
நேசத்தின் அலை மனதில்
சீராக வந்து
அமைதியை பரப்பும்
உன் இதழ்கள்
பேசுவதை விட
அதிகம் பேசுகிறது
உன் கண்கள்
உள்ளங்கையில்
தாங்குவதை விட
நீ எனை உள்ளத்தில்
ஏந்திக்கொள்
மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ளவரை
அழகான இடத்திற்கு அழைத்து
சென்று என் காதலை
சொல்ல ஆசைதான் ஆனால்
நீ என்னுடன் இருக்குமிடம்
எல்லாமே அழகாய் தெரிகிறதே
என்னதான் நான் செய்ய ?
உறங்கினால் கனவில்
வருகிறாய் உறங்காவிடில்
நினைவில் வதைக்கிறாய்
காத்திருக்கிறேன் உன்னை
விரைவில் அருகில் காண
மௌனத்தில் புன்னகை சேரும்போது
விரல்கள் கூட
வார்த்தைகளாக மாறுகின்றன
💖 பக்கம் 245 / 478
📋 Copied