தொடுதலின் ஒவ்வொரு வினாடியும்
ஆசையை கவிதையாக்குகிறது
கடினம் தான்
ஆனாலும் சுகம்
நீ வருவாய்
என்ற நினைப்பே
காத்திருப்பில்
நெஞ்சின் ஒவ்வொரு துடிப்பிலும்
உன் நினைவுகள்
சுருதியாகி வாழ்கின்றன
அருகில் சாயும் தோள்
கனவுகளை விட
இனிமை தருகிறது
நிழலும்
நிஜமாகாதாயென
ஏங்குது மனம்
உன் பிம்பமெதிரே
தோன்ற....
அலையாய் வீசும்
உன்னன்பில்
மிதக்கின்றேன்
காகித கப்பலாய்
சந்தோஷ கடலில்
சிரிப்பில்
மறைந்திருக்கும் ரகசியம்
காதலின் நிழலே
மழைத்துளி போல
விழும் பார்வை
ஆன்மாவை நனைக்கிறது
உன்னை நினைக்கும்போது
என் மனதில் மலர்கள் மலர்கின்றன
ஆனால் உன்னை காணும் போது
எனது உலகமே பரிமளிக்கிறது
பிடித்து அணியவில்லை
உனை பிடித்ததால்
அணிகிறேன்.
நீ காதலோடு கொடுத்த
கால் கொலுசை
💖 பக்கம் 244 / 478
📋 Copied