மறக்க நினைக்குறேன்
இருந்தும்
மறக்காமல் நினைக்கிறேன்
என் உயிரின் கண்களில்
நீயே ஒளியாக இருக்கிறாய்
நீள வேண்டும்
இந்நொடிகள்
நினைத்து நினைத்து
ரசித்திட
நம் நிமிடங்களை
தோளில் சாயும் அந்த அமைதி
வார்த்தைகளைத் தேவையற்றதாக்குகிறது
என் மனதில்
பூத்த மென்
மலர் நீ
நான் நுகரும்
(சு)வாசமாய்
என்றும்
உதிரா நேசமாய்
காதலின் மென்மையான சாயல்
சோர்வான நாட்களை
வசந்தமாக மாற்றுகிறது
இதயத்தில் இடம் பெற்றவள்
முகத்தில் பதிந்துவிடுகிறாள்
அது காதலின் நேரடி காட்சி
மூச்சின் இடைவெளிகளில் கூட
காதலின் அலை
மெதுவாக பரவி
இதயத்தை நனையச் செய்கிறது
காற்றில் கலக்கும்
வாசனை கூட
இதயத்தை மயக்குகிறது
துளையில்லா
மூங்கில் மரங்களிலும்
புல்லாங்குழலின் இசை
உன் நினைவுகள் தீண்ட
💖 பக்கம் 240 / 478
📋 Copied