பாதத்துக்கு பாலமாய்
வேண்டாம்
இதயத்துக்கு இதமாயிரு
போதும் அன்பே
மழை பெய்யும் நேரத்தில்
மனம் மட்டும்
அவளை நினைக்கிறது
காதலின்
வெளிபாடுதான்
முத்தமென்றால்
நாமும் பரிமாறிக்கொள்வோம்
முத்தங்களை
விழிகளை இதழ்களாக்கி
என்னிடம் பேசாதே என
சொல்வதற்கு
மட்டும்தான் உரிமை உண்டு
என்னைப் பற்றி
நினைக்காதே என
சொல்வதற்கு உரிமையே கிடையாது...
ஒட்டி
கொண்டிருக்கும்
தாடிக்குள்
சிக்கி கொள்கிறது
மனம் தினம்
நெஞ்சுக்குள்ளே
ஒலி இல்லாமல்
இசை போல் பேசினவள்
அவள்தான் காதல்
இருளின் மத்தியில் கூட
அவர் பார்வை ஒளியாக மாறும்
பார்வை சொல்வதை
காதல் அறிந்தால்
மௌனம் தான்
மெழுகுவர்த்தியாகும்
சிந்தும்
நீரை சிறைபிடிக்க
சிக்கி கொண்டது
உன் நினைவு
தன்னை உருக்கி
கொண்டு
ஒளி கொடுக்கும்
மெழுகாய் நீயும்
உன் வலிகளை
தாங்கி கொண்டு
எனக்கு வழியாய்
இருக்கின்றாய்
💖 பக்கம் 234 / 478
📋 Copied