புதிதாய் உணவு
நீ சமைக்க
காதலோடு நானும் அதை ருசிக்க
அறுசுவையில் ஒன்று
கூடிப்போனது உன்னால்

மனத்தில் சிதறிய ஆசைகள்
நடுவே காதல் மலர்ச்சி பெறும்

தொடர்ந்து மழை பெய்தாலும்
ஒரே ஒரு அணைப்பால்
உடல் வெப்பம் நிலைத்திருக்கும்

உன் புன்னகையின் ஒளி
என் ஆன்மாவை
வெளிச்சமாக்கி ஒளிர்விக்கிறது

நீ எங்கு போனாலும்
என் மனம் அங்கே
உனுடன் இருக்கின்றது

தோளில் ஓயும்
ஒரு சுவாசம்
வாழ்வை மறக்க வைக்கும்

விரல்களால் எழுத முடியாத காதலை
பார்வை சிறப்பாய் எழுதிவிட்டது

கண்ணால் பேசியே
கற்று கொடுத்தாய்
என் கண்களுக்கும்
காதலிக்க

சுகமான
உன் நினைவு
தான் சுமையாகி
கனக்கின்றது
உனை காணாத
போது

மன கிளையில்
படர்கிறாய்
கொடியாக
உள்ளமும் அசைந்தாடுது
ஊஞ்சலாய்