நான் உனக்காக என்
சந்தோஷங்களை விட்டு
கொடுத்தால் நீ உன்
சந்தோஷத்திற்கு என்னையே
விட்டுக் கொடுக்கிறாய்
உதடுகளை தொடும் நேரம்
என் மனதின்
எல்லா வார்த்தைகளும்
மௌனமாகின்றன
கையளவு இதயத்தில்
கடலளவு காதலை
நிரப்பி மூழ்கடிக்கிறாய்
அன்பில் அன்பே
கண்கள் பேசும் மொழி
காதலுக்கே உரிமை பெற்ற மொழி
யாசகமும் ஏனடா
யோசிக்காமல் தருவேனே
என் சுவாசத்தையும் கூட
ஏந்தி கொள்வது
நீயென்றால்
முத்தத்தின் மென்மை
ஆயிரம் வார்த்தைகளின்
அர்த்தத்தை சொல்கிறது
காதல் என்பது
கண்ணில் தொடங்கும் கனாக்கள்
இதயத்தில் எழுதப்படும் கவிதைகள்
நீ என்னை
தொலைத்தாலும்
நான் உன்னில்
தொலைந்தே
இருப்பேன் என்றும்
உன்னை தொலைக்காது
இருள் கூட
வெளிச்சமாய் தெரிந்தது
அவள் கண்களில் நான்
தொலைந்த போது
புன்னகையின் பின்னால்
இருக்கும் கவலைக்கே பதில்
அவன் பார்வை
💖 பக்கம் 235 / 478
📋 Copied