சுவாசத்தின் ஓசையில் கூட
காதல் ருசிக்கலாம்
ஆசை உணரலாம்
சுவாசத்தின் ஓசையில் கூட
காதல் ருசிக்கலாம்
ஆசை உணரலாம்
இரவில் நிலா
தேவை இல்லை
நினைவுகள் ஒளிக்கின்றன
இதயம் துடிக்கும்
இடைவெளியில்
அவளின் பெயர் ஒலிக்கிறது
நீரிலும் அழியா
கோலம்
உன் நினைவு தடம்
தனிமையிலும்
நிழலாய் என்னுடனே
உன்னிதழ்
சுவைத்த தேனீர்
என்னிதழை
நனைக்க கரைந்தது
ஊடலும்
என் நெஞ்சில் உன் பெயர்
என் கண்களில் உன் கனவு
என் வாழ்கையில் உன் காதல்
விருப்பத்தின் அலை நரம்புகளை
கிளரச் செய்து
தொடாத தொடுதலின்
கனவுகளை கூட
உண்மையாய் உணரச் செய்கிறது
பார்வை மோதும் தருணம்
இதயத்தின் துடிப்பை
எழுதிக் கொண்டது
ஆழம் விழுதை போல்
வேர் பிடித்து
பனை மரம் போல்
பெருக வேண்டும்
நம் காதல்
இதயம் சிலரை
கண்ணால் அல்ல
மூச்சால் நினைத்துக்கொள்கிறது