மிகவும் பிடித்ததைப்
பட்டியலிடும் போதெல்லாம்
முதலில் நினைவுக்கு வருவது
உன் பெயர் தான்

பார்வை மட்டும் போதாது
பார்வைக்குள்ளே புலப்படும்
உணர்ச்சியே ரொமான்ஸ்

நம்மை நனைத்த
மழைதுளி காய்ந்தபோதும்
நாம் இணைந்த நினைவு
துளி இன்னும் ஈரமாகவே
உள்ளது மனதில்

கவிதைக்கு பொய்யழகு
என்பதும் பொய்பாகி
போகின்றது
நம் மெய்
காதல் கவிதையாகும்
போது

சிறு சலசலப்பும்
எனை ஏமாற்றுகிறது
உன் வருகையோயென
நினைக்க வைத்து

சிறிய சிரிப்பில்
ஒரு உலகம் காணப்பட்டது
அதுதான் காதல்

என்றோ நீயெனை
எதார்த்தமாய்
கடந்த போது
சற்றும் எதிர்பார்கவில்லை
நீயே என்
எதிர்காலமாவாய்
என்று என்னவனே

உன் குரலின் இனிமை
என் இதயத்தை
அடிக்கடி தழுவும்
காதல் அலைகள்

பயணிப்போம்
ஒரு பயணம்
கரம்பற்றி
களைப்பாகும்
வரை
காதல் தேசத்தில்...!

காரணம் கேட்காமலேயே
கண்ணீரின் வலியை
உணர்ந்து கொள்ளும்
துணை கிடைப்பது
வரம்