நினைப்பதில்லை
என்று வருந்தாதே
என் நாழிகை நகர்ந்து
கொண்டிருப்பது
நம் அழகிய
நினைவுகளில் தானன்பே

தூக்கம் வராத
இரவுகள் கூட
இனிமையாகத் தெரியும்
நினைவுகள் மட்டும்
துணையாக இருந்தால்

அருகில் இல்லாத தேடல்தான்
உண்மையான காதலை
உணர வைத்தது

கோர்த்து வைத்த
வார்த்தைகளை
எல்லாம்
கொய்து விட்டாய்
பார்வையில்

நீ எழுதாதபோதும்
பல கவிதைகள்
ரசிக்கின்றேன்
உன் விழிகள்

அவள் எதையும் பேசவில்லை
ஆனால் மனதெல்லாம்
அவளால் நிரம்பியது

மாலை நேரத்தின் மங்கலொளியில்
இரு இதயங்கள் வார்த்தையின்றி
ஒருவரை ஒருவர்
உணர்ந்து இணைகின்றன

ஓசை வேண்டாம்
பாஷை வேண்டாம்.
இப்படியே இருந்துவிடேன்
உன் விழி தீண்டலில்
கொண்டாடிட
ஓய்வுநாளை நானும்

நீ என் கவிதைகளை
வாசிக்கும் அழகிற்கே
ஆயிரம் கவிதை எழுதி
விடுவேன் நான்

தொலைவேன் என்று தெரியும் ஆனால்
உனக்குள் இப்படி மொத்தமாய்
தொலைவேன் என்று நினைக்கவில்லை