ஒரு பார்வையில்
உனது காதல்
என் சுவாசம் ஆகி விடுகிறது

சொற்கள் பேசாமல்
பார்வை பேசும் தருணம் தான்
காதலின் பரிசுத்தம்

பிரித்தெடுக்க முடியாத
சிக்கலாய் சிக்கிக்கொள்ள
பிடிக்கும்
உனதன்பில் அன்பே

நினைவு ஒரு இசை
மனம் அதை அடிக்கடி கேட்கும்

சிரிப்பு ஒரு மருந்து என்றால்
பாசம் அதன் மருந்தளவு

வாசிப்பது நீயென்றால்
யோசிக்காமல் எழுதுவேன்
கண்களிலும்
மை கொண்டு
பல கவிதைகள்

கலைந்த கனவுகளை
மீட்டுக்கொடு மீண்டுமொரு
கனவு காண
திரானியில்லை
கண்களுக்கு

தேகம் காதலால் கலக்கும்போது
ஆன்மா உருகி விடுகிறது

கைகள் ஒன்றாக சேர்ந்தால்
பிரபஞ்சமே நம்மை
ஆசீர்வதிக்கிறது

உன்னை
நினைத்து
என்னை
மறப்பதுதான்
காதலென்றால்
ஆயுள் முழுதும்
வாழ்வேன்
எனை மறந்து