மெதுவான நெருக்கம் கூட
இரவின் அமைதியை
அலைகளாக மாற்றுகிறது

உன் கண்கள்
சொல்லும் கவிதையை
ரசித்து கொண்டேருக்கலாம்
நாளெல்லாம்

எண்ணவில்லை நீ
என் எண்ணமாவாய்
என்று
வண்ண கனவுகளோடு
என் வாழ்க்கையில்
வந்து

என் கவலைகளுக்கு
நீ மருந்தாகின்றாய்
உன் கவலைகளை
மறைத்து

மௌனத்தில் கூட
ஆயிரம் வார்த்தைகள்
பேசும் ரொமான்ஸ்

நீ பேசும்
மொழியிடம்
ஜெயித்து விட்டாலும்
உன் பேசா
மொழியிடம்
தோற்றுத்தான்
போகிறேன் நானும்

எட்டி
நீ போனாலும்
நித்தம் மனதை
கொல்லுது
கொலுசொலி
உன் நினைவு
சின்னமாய்

சிரிப்பு ஒரு மருந்து என்றால்
அது பாசம் கலந்து வரும் காதல் தான்

மூச்சின் வேகத்தில்
கரையும் விருப்பம்
உடலின் எல்லைகளை
கடக்க வலியுறுத்துகிறது

காதல் என்பது
காலத்தை முறித்து
நம் இருவரையும்
ஒன்றாக பின்னும் தேன் நூல்