நெருக்கமில்லாத காதலின்
மென்மைதான் வாழ்நாளை
முழுவதும் நினைவில் நிற்கும்

நம் நினைவில்
மூழ்கி விட்டால்
இரவும் எனக்கு
சிவராத்திரி தான்

சிரிப்பில் தோன்றும் ஒளி
இதயத்தின் இருளை கரைத்தது

நம் உலகத்தில்
உன்னென்
நிழலை தவிர
வேறதெற்கும்
இடமில்லை

கண்ணாடியில்
ஒரு பெண்
தன்னை ரசித்து கொள்ளும்
அழகை விட
காதலோடு தனக்கு
பிடித்தமான ஒருவர்
அவளை ரசித்து சொல்லும்
அழகு பேரழகு

அருகில் இருக்கும்
அன்பு அழகானது
ஆனால் தொலைவில்
இருக்கும் அன்போ
அதை விட ஆழமானது

உன் காதல் எனக்கு
ஒரு புதிய உலகத்தை திறக்கிறது
அந்த உலகில் உன்னுடன்
நான் வாழும்
ஒவ்வொரு நொடியும்
என் வாழ்வின்
சிறந்த தருணமாகும்

மலரும்
நினைவுகள்
மனதை தாலாட்ட
உறங்கிப்போனது
விழிகள்

பிரிந்தால் பறந்திடும்
உயிரென்றே
பற்றிக் கொள்கிறேன்
உனை மனதுக்குள்
என்னவா

உளிகொண்டு
பார்வையில்
செதுக்குகின்றாய்
சிலையாகின்றேன்
நானும்