கையை பிடித்த தருணத்தில்
எல்லா வார்த்தைகளும்
மௌனமாகிறதே

நீ எனது வாழ்க்கையின்
அழகான அத்தியாயம்
எப்போது என்றும்
உன்னை நினைக்கும்போது
என் இதயம் மகிழ்கின்றது

பார்க்கும் தூரத்தில்
நீயில்லை என்றாலும்
உனை எதிர்
பார்த்திருப்பதை
நிறுத்தவில்லை
விழிகள்

உன் நினைவுகள்
தொற்றிக்கொள்ளும் போது
என் விழியிலும் பல கனவுகள்....

உறங்கி கிடக்கும்
கண்களுக்குள்
கிறங்கி கிடக்கு
உன் நினைவு
உறங்காமல்

அழகில் மட்டும் இல்லை
ஆசையில் அழகு என்னும்
புதையல் இருக்கிறது

தொடு திரையிலும்
தொட்டிழுக்குறாய்
மனதை
காந்த பார்வையில்

நீந்தி விளையாடும்
காகித கப்பலாய்
அழகாய் நீயும்
மனதில் நீந்தி
எனை மூழ்கடிக்கிறாய்
உன் நினைவுகளால்

இதயம் அமைதியாக
தேடும் பாசம்
சிறு புன்னகையிலேயே
உலகத்தை முழுதும்
வெல்லும் சக்தியாகிறது

வேட்டியில் கரையாய்
படிந்து விட்டாய்
மனதில் அழித்தாலும்
அழியாத அழகிய
காதல் கறையாய்
உயிரே