மொத்த
கவலைகளும்
கலைந்துப்போகிறது
உன் நினைவு
தென்றலாய்
தீண்ட

பார்த்த ஞாபகம
என்னுள் சிறகடிக்கிறது
உன்னை பார்க்காத போதும்

உன்னைக் காணாத
ஒரு நாளே எனக்குத் தவிப்பு
உன்னை பார்க்கும் தருணமே
என் உயிரின் அர்த்தம்

நீ மூச்சி
காற்றுப்படும் தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா தேசத்திலும்
உயிர் வாழ்வேன்

சலிக்காமல்
காத்திருக்கும்
நிலவாக உனை
காண நான்

உனக்காக காத்திருக்கும்
நிமிடங்கள் ஓர் சுகமே
உயிருக்குள் உனை
தினமும் சுமந்திருப்பேன்
ஒரு தாய் போல

இரவின் அமைதியில்
மூச்சின் இசை
காதலின் கவிதை ஆகிறது

மழை நனைக்கும் நேரத்திலும்
காதல் இதயத்தை சூடாக வைத்தது

நினைவில்
என் நிழலில்
என அனைத்திலும்
நீயாகிப்போனாய்

பார்வைகள்
கடந்து செல்லும்
அந்த நொடியில்
காதல் பிறக்கிறது