இணைக்கப்பட்ட
விரல்களுக்கு நடுவே
ஓர் உயிர் நடக்கும்
இணைக்கப்பட்ட
விரல்களுக்கு நடுவே
ஓர் உயிர் நடக்கும்
என்னுள் இருந்து
கொண்டே
எனை தவிக்கவிடும்
உன்னிதயமும்
பெரும் இம்சைதான்
நீயில்லா பொழுதுகளில்
நீ எனக்கு ஒரு கனவின் சித்திரம்
அதை உண்மையாக மாற்ற
நான் உன்னுடன் இருக்க வேண்டும்
மழைத் துளியின் மென்மை போல
பாசம் மனதைக் கட்டி
அணைத்து அமைதியை வழங்குகிறது
முற்றுப் பெற்றது
என்ற பெருமூச்சோடு
அள்ளி முடிந்தாலும்
மனம்
அவிழ்த்து விடுகிறது
உன் நினைவுகளை
நீதான்
என் உயிர்மூச்சென்று
கூந்தலை பிடித்திழுத்து
விளையாடி ஜிமிக்கியும்
உன்னை அடிக்கடி
ஞாபகபடுத்துது
கண்ணில் பார்க்க முடியாத
ஒன்றுதான் உண்மையான காதல்
ஆனால் அதை
மனம் மட்டும் உணர முடியும்
ஒருவர் மீது
காதல் வர ஒரு காரணம் இருக்கும்
ஆனால் அந்த காரணம் தான்
யாருக்கும் தெரிவதில்லை
புன்னகையில் புதைந்திருக்கும் காமம்
இதழ்களின் அசைவில் வெளிப்படும்
இதயம் தேடும் பாசம்
சுமைகள் கூட
மலராக மாறும் அளவிற்கு
மென்மையைக் கொண்டது