நெருக்கமில்லாமல்
நிம்மதியை தரக்கூடிய
ஒரே நபர்
(காதலியாம்)
நெருக்கமில்லாமல்
நிம்மதியை தரக்கூடிய
ஒரே நபர்
(காதலியாம்)
மாறினேனா
எனை மாற்றினாயா
இனம்புரியா
இதமான இம்சைகள்
உன்னால்
இதயத்தின் துடிப்பும்
பார்வையின் அமைதியும்
சேரும் போது
காதல் கனவில் மாறும்
அவளும் நானும்
இணைந்தால் சிறு துளி
மழை கூட இருவருக்கும்
அடை மழை தான்
அழகான கண்களுக்கும்
ஆழமான கண்ணீருக்கும்
இடைப்பட்டது தான் காதல்
வானத்தில் மட்டுமின்றி
எந்தன் கவியிலும்
நித்தமும் ஒளி வீசும்
ஒற்றை பேரழகி அவள்
உன் தித்திக்கும்
காதல் பார்வையில்
காப்பியாய் இனிக்கிறது
கசாயமும்
ஆடி களைத்து
ஓய்ந்து கிடக்கும்
சிலம்பாய்
மனம்
உனை தேடி
களைத்து
ஓய்ந்து கிடக்கு
மௌனத்தில் பேசும் சுவாசம்
ரொமான்ஸின் மொழி
தொடுதலில் உருவாகும் அதிர்வு
ஆன்மாவின் ஆழத்தில் ஒலிக்கிறது